சென்னை: மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். 1967க்கு பின் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு தமிழ் மொழியே காரணம். மொழி பேரினவாதத்திற்கு இடம் தரக்கூடாது, இதுபோன்று சக்திகள் தலையெடுக்க அனுமதிக்க கூடாது. மேலும் மொழிகள் தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடாது எனவும் நீதிபதி குறிப்பிட்டார். குண்டு வைத்த புகாரில் கைதான கலைலிங்கத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார்.