டெல்லி: டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு மக்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் அவசரமாக கூடுகிறது. 14ம் தேதி தொடங்கிய நிலையில் மக்களவை கூட்டத் தொடர் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா சூழலில் மக்களவை அலுவல்களை முன்கூட்டியே முடித்துக்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.