டெல்லி: 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை 44,13,896 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே பதிலளித்தார். எத்தனை குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்கப்படவில்லை என்ற விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.