ஹைதராபாத் : தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது ஆதரவாளர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார். தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டை மாவட்டம், ஹுசூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் ஆவார். பிரதமர் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக வீட்டுக்கு அருகில் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயில் கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இக்கோயிலில் பிரதமர் மோடியின் உருவப்படம் உள்ளது.