தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் : தினமும் இரு வேளையும் பூஜை செய்து வழிபடும் தொண்டர்!!

ஹைதராபாத் : தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது ஆதரவாளர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார். தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டை மாவட்டம், ஹுசூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் ஆவார். பிரதமர் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக வீட்டுக்கு அருகில் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயில் கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இக்கோயிலில் பிரதமர் மோடியின் உருவப்படம் உள்ளது.

இங்கு தினமும் இரு வேளையும் சதீஷ் பூஜை செய்கிறார் . இதனை அப்பகுதியில் உள்ள பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.சதீஷ் பிரதமர் மோடியின் உரைகளை தான் வசிக்கும் பகுதியில் தனி ஆளாக பிரச்சாரம் செய்து வருகிறார். தான் பாஜகவின் தொண்டன் என்பதை விட பிரதமர் மோடியின் பக்தன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார். இதே போல் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு விவசாயி சங்கர் என்பவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.

Related Stories: