மேற்குவங்கம், கேரளாவில் நடத்திய அதிரடி சோதனையில் 9 அல் கொய்தா தீவிரவாதிகளை கைது செய்தது என்.ஐ.ஏ: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.!!!

திருவனந்தபுரம்: மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடத்திய சோதனையில் 9 அல் கொய்தா தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதிலும், கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலும்  இன்று அதிகாலை அதிரடி தேடுதல் வேட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டனர். என்ஐஏ-யின் இந்த சோதனையில், 9 அல் கொய்தா தீவிரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தில் 6 பேரும்,  கேரளாவில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்  மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும், அதில் அப்பாவி மக்களை கொல்லவும் சதி செயல்களில் ஈடுபட்டிருந்ததாக என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து என்.ஐ.ஏ தெரிவிக்கையில், 9 அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, “டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதி இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள்,  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் தயாரிக்கக்கூடிய வெடிக்கும் சாதனங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த நபர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்களில் தீவிரமயமாக்கப்பட்டனர் மற்றும் டெல்லி-என்.சி.ஆர் உட்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்த தூண்டப்பட்டனர் என்று என்.ஐ.ஏ  கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியை நிதி உதவியை பெறவும், சில உறுப்பினர்களை புதியதாக இணைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். மேலும், டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் அவர்கள்  திட்டமிட்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: