×

மோர்க்குளத்தில் மிரள வைக்கும் பள்ளி கட்டிடம்

கீழக்கரை : மோர்குளத்தில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கீழக்கரை அருகே பி.மோர்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1977ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளியில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் இருந்தன. இந்த கட்டிடம் மிகவும் மோசமானதால் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டப்பட்டது. 2004ம் ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. தற்போது
பழைய கட்டிடத்தின் பக்கவாட்டு சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பயன்பாடு இன்றி இடியும் நிலையில் உள்ளது.

மழைக்காலங்களில் அதிகளவு மழைநீர் புகுந்து சேரும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் அருகில் உள்ள கடந்த 1982ல் கட்டப்பட்ட சத்துணவு கூடமும் சேதமடைந்து மிகவு‌ம் மோசமான நிலையில் உள்ளது. எனவே தொடக்கப்பள்ளி கட்டிடத்தையும், சத்துணவு கூடத்தையும் இடித்து அகற்ற திருப்புல்லாணி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Miracle school building , Keelakarai, school building, Damaged,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை