சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் (ஏசிஆர்எப்) ஆராய்ச்சி மேற்கொள்ளும் மணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும் ஆண்டுக்கு 25 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் (சிஎப்ஆர்) இயக்குநர் கே.பி.ஜெயா, தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.