சென்னை: மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்க கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளதால், அந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தும்படியும் உத்தரவிட்டார்.
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, கால நீட்டிப்பு கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.