தண்டையார்பேட்டை:சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளில் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு மண்டலங்களிலும் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது, காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாத சம்பளம் அடிப்படையில் இவர்களை மாநகராட்சி நிர்வாகம் பணியில் அமர்த்தி உள்ளது. ஆனால், பல மண்டலங்களில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை, என கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட களப்பணியாளர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.