அபுஜா: கொரோனா காலத்தில் குற்றங்கள் அதிகரிப்பால், பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அகற்றப்படும் என்று நைஜீரியா நாட்டில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நைஜீரியா நாட்டில் பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்தது. புதிய சட்டத்தின்படி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களின் பிறப்புறுப்புகள் அகற்றப்படும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை குழாய் (பாலோப்பியன் குழாய்) அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.