சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கம் நடத்தும் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்கள் பாதை இயக்கம் நடத்தும் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு எனது தார்மீக ஆதரவு உண்டு. எனினும் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற முடிவை கைவிட்டு மக்கள் சக்தியை அணிதிரட்ட வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் 6 பேரின் அளப்பரிய தியாக உணர்வை பாராட்டுகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.