×

திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறை இல்லை.. ஓய்வுபெற்ற அதிகாரிகள் அவசியமில்லை : சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை

சென்னை, : திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறையில்லை என்பதால்,  சிலை கடத்தல் தொடர்பாக மாயமான ஆவணங்களை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை வைத்து விசாரிக்க  அவசியம் இல்லை என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும்  சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின்  ஆவணங்கள் காணாமல் போய்யுள்ளது. அது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நியமித்து,  உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்  சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில், மாயமான வழக்கு ஆவணங்களை கண்டறிய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, காணாமல் போனதாகக் கருதப்பட்ட 41 வழக்கு ஆவணங்களில், 23 வழக்குகளின் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பிடித்துள்ளனர். அவை மாவட்ட போலீஸாரால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் மீதமுள்ள 18 வழக்குகளின் ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையங்கள், வழக்கு சம்மந்தப்பட்ட நீதிமன்றங்கள்,புகார்தார்கள், கோவில் அதிகாரிகள்,கிராம நிர்வாக அலுவலர்கள் என வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு உட்பட்டு தங்களது கடமையை திறம்பட செய்து வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லாததால். காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு தொடர்பான  ஆவணங்களை கண்டறிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags : police force ,
× RELATED ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்...