ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,096 பேருக்கு கொரோனா.: 6.09 லட்சம் மொத்த பாதிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 74,710 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் 8,096 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,09,558 பேருக்கு ஆந்திராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 84,423 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,19, 891 பேர் சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,244 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.  

Related Stories: