பீஜிங்: கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் ‘புருசெல்லா’ என்னும் நோய் பரவி வருகிறது. இதுவரை 3,245 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வடமேற்கு சீனாவின் குவாங்சோ மாகாண தலைநகரான லாங்ஜோவில் உள்ள சோங்மு லாங்ஜோ உயிரியல் மருந்து நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் புருசெல்லா பாக்டீரியா கசிந்துள்ளது. இதனால், மால்டா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொடிய புருசெல்லா பாக்டீரியா கசிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 3,245 பேருக்கு புருசெல்லா பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக லாங்ஜோ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.