டெல்லி: மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் உடனடியாக அனுமதி தர வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். நாடாளுமன்ற அலுவலகத்தில் 15 நிமிடங்கள் நேரில் சந்தித்து எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார்.