டெல்லி: மேகதாது அணைக்கு உடனே அனுமதி வழங்க டெல்லியில் பிரதமரிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 15 நிமிடங்கள் முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பான விஷயம் என கூறி உடனே அனுமதி தர எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார்.