டெல்லி: மக்களவையில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றி உள்ள மத்திய பா.ஜ.கஅரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். வேளாண்துறை சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றும் முன் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. வேளாண் மசோதாக்களை பா.ஜ.க அரசு நிறைவேற்றி இருப்பது மாநில உரிமைகள், கூட்டாட்சி மீதான தாக்குதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.