புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 52.14 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 84 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 96,423 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,14,677 ஆக உயர்ந்தது.
* புதிதாக1,174 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 84,372 ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 87,472 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 41,12,551 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,17,754 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 78.86% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.62% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 19.52% ஆக குறைந்துள்ளது.
*இந்தியாவில் இதுவரை 6.15 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ICMR அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 10.06 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 302135 ; குணமடைந்தோர் : 812354; இறப்பு : 31351
தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46610; குணமடைந்தோர் : 470192 ; இறப்பு : 8618
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 31721 ; குணமடைந்தோர் : 198103 ; இறப்பு : 4877
கேரளா : சிகிச்சை பெறுவோர் : 34380 ; குணமடைந்தோர் :87345 ; இறப்பு : 489
கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :103650 ; குணமடைந்தோர் : 383077 ; இறப்பு : 7629
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 88197 ; குணமடைந்தோர் : 508088 ; இறப்பு : 5177