பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே வீரமங்கலம் ஊராட்சி திமுக சார்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் மா.ரகு தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் திலகவதி ரமேஷ் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் பங்கேற்று கட்சி கொடி ஏற்றிவைத்து பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.