×

வீரமங்கலத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே  வீரமங்கலம் ஊராட்சி திமுக சார்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் மா.ரகு தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் திலகவதி ரமேஷ் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் பங்கேற்று கட்சி கொடி ஏற்றிவைத்து பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சி.என்.சண்முகம் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  நிர்வாகிகள் புருஷோத்தமன், வெங்கடேசன், ஜான் ஆகாப், எஸ்.ஆர்.ரவி, சி.எம்.ரவி, எஸ்.ஆர்.செங்குட்டுவன், பா.சம்பத், இ.மணி, வி.ஜி.மோகன்   உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags : ceremonies ,DMK ,Veeramangalam , Three grand ceremonies on behalf of DMK at Veeramangalam
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி