சென்னை: தமிழகத்தில் நடந்த கிசான் திட்ட மோசடியை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று பொன்முடி கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கூட்டம் முடிந்த பின்பு கலைவாணர் அரங்க வளாகத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் கிசான் திட்டத்துக்கான கவன ஈர்ப்பு தீர்மானம் அவையில் கொண்டுவரப்பட்டது. இதை ஆய்வு செய்ய மாநில அரசின் அதிகாரிகள் தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது அனைத்தும் மத்திய அரசே பொறுப்பு என்று சொல்ல முடியாது. இந்த ஊழல் என்பது நிலமே இல்லாதவர்கள், விவசாயியே இல்லாதவர்களின் பெயரை எழுதி பணம் கொடுத்தன் விளைவாக ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.110 கோடி. இதை அமைச்சர் பேசும் போதே ஒத்துக் கொண்டார்.