ராமசாமி படையாச்சியார் 103வது பிறந்த நாள் காங்கிரஸ் கட்சி சார்பில்மாலை அணிவித்து மரியாதை: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ராமசாமி படையாச்சியார் 103வது பிறந்த நாளை யொட்டி காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: காமராஜர் ஆட்சியில் 1954ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் 103 வது பிறந்தநாளில் அவரது நினைவை போற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காக இட ஒதுக்கீடு பெறுவதற்கு தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக போற்றுகிறேன்.  சென்னை, கிண்டி-ஹால்டா அருகில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் திருவுருவச் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் பலராமன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்தழகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: