சென்னை: விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு புதிய பல்கலைக்கழகம் வழிவகுக்கும்.