×

ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் மாணவி தற்கொலை

கோவை: கோவையில் ஆன்லைனில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். கோவை உடையாம்பாளையம் அருகேயுள்ள திருமலை நகரை சேர்ந்தவர் முருகானந்தம். கூலி தொழிலாளி. இவர் மகள் ஸ்நேகா (15). தனியார்  பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.  இந்த தகவலை ஸ்நேகா தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

ஆனால் போதுமான வருமானம் இல்லாத நிலையில் சில நாட்கள் கடந்து பள்ளி கட்டணம் செலுத்தலாம் என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இதில் மனம் உடைந்த ஸ்நேகா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு இறந்தார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

Tags : Student ,suicide , Online class, school fees, student, suicide
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...