×

மேட்டூர் நீர்மட்டம் 99 அடியாக உயர்வு

மேட்டூர்: கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து,  அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.  நேற்று முன்தினம் விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து,  நேற்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 13,500 கனஅடி  தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை பாசனத்திற்கு திறக்கப்படும் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.  இதனால், நேற்று காலை 99 அடியாக உயர்ந்தது.

Tags : Mettur , Mettur water level
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு