×

கல்பனா விருது பெற்ற 3 பெண்களுக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை:. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை பகுதியில் மருதையாற்றுக்கு அருகில் உள்ள திடலில்  மட்டைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதால், அதில் பங்கேற்பதற்காகவும், போட்டிகளைக் காண்பதற்காகவும் வந்த இளைஞர்கள் சிலர் அந்த  பள்ளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். மக்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத நீச்சல் தெரியாத 4 இளைஞர்கள் ஆழத்தில் சிக்கி உயிருக்கு  போராடியுள்ளனர். அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள் தங்களின்  சேலையை கயிறாக மாற்றி அந்த இளைஞர்கள் நோக்கி வீசியுள்ளனர்.

அவர்களில் இருவர் நீரில் மூழ்கி இறந்து விட்ட நிலையில்,   கார்த்திக், செந்தில் வேலன் ஆகிய இரு இளைஞர்களை  பத்திரமாக மீட்டு கரை  சேர்த்தனர்..செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூவருக்கும் வீரதீர செயல்களுக்கான விருதும், வெகுமதியும் வழங்க தமிழக அரசு  முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதையேற்று இப்போது அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப் பட்டிருக்கிறது.விருது  பெற்ற 3 பேருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது

Tags : women , Kalpana Award, 3 Girls, Ramadas
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது