×

நாட்டின் ஒவ்வொரு கிராமமும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கும் திட்டம்: ரவிசங்கர் பிரசாத் வரவேற்பு

டெல்லி: ஒவ்வொரு கிராமமும் அடுத்த 1000 நாட்களில் கண்ணாடி இழை இணையக் கேபிள் (ஓஎஃப்சி) இணைப்புடன் இணைக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 74வது சுதந்திர தின உரையின் போது, அடுத்த 1000 நாட்களில், லட்சத்தீவு, கடல் நீருக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடி இழை இணைய கேபிள் மூலம் இணைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

நம்மிடம் சுமார் 1300 தீவுகள் உள்ளன. அவற்றின் புவியியல் இருப்பிடம் மற்றும் தேச வளர்ச்சியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, இந்தத் தீவுகளில் சிலவற்றில் புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவான வளர்ச்சிக்காக சில தீவுகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். சமீபத்தில் நாங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஒரு சிறந்த இணையத்திற்காக கடலுக்கடியில் கேபிள் மூலம் இணைத்தோம்.

அடுத்து நாங்கள் லட்சத்தீவை இணைப்போம் என்று அவர் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார். டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள சேவைகளுக்கு இணையாக யூனியன் பிரதேசத்திற்கான அதிவேக அகன்ற கற்றை இணைப்பை உறுதி செய்வதற்காக இந்த வாரத் தொடக்கத்தில் சென்னை மற்றும் அந்தமான், நிக்கோபார் இடையே முதன்முதலில் கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைய கேபிள் இணைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். லட்சத்தீவும் கடலுக்கடியிலான கண்ணாடி இழை இணைய கேபிளுடன் இணைக்கப்படும் என்றார்.

வரவிருக்கும் 1000 நாட்களில், நாட்டின் ஒவ்வொரு கிராமமும் கண்ணாடி இழை இணைய கேபிள் மூலம் இணைக்கப்படும் என்று தெரிவித்தார். 2014க்கு முன்னர் , நாட்டில் 60 பஞ்சாயத்துகள் மட்டுமே கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருந்ததாக மோடி குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கிராம் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சீரான வளர்ச்சிக்கு கிராமப்புற இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியாவில் கிராமங்களின் பங்கேற்பும் இந்தியாவில் சமமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

இதனை ஏற்படுத்துவதற்கு நமது கண்ணாடி இழை இணையக் கேபிள் கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்துவோம். இது 1000 நாட்களில், 6 லட்சம் அனைத்து கிராமங்களையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடியின் இந்த முக்கியமான அறிவிப்புக்கு ட்விட்டரில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.



Tags : village ,country ,Ravi Shankar Prasad , Glass fiber internet cable, Ravi Shankar Prasad
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...