சென்னை: அச்சம், வறுமை, அடக்குமுறையிலிருந்து விடுதலை என்பதே சுதந்திரம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 74வது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 7வது முறையாக தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, கொரோனாவுக்கு விரைவில் தடுப்பூசி விரைவில் மக்களுக்கு அளிக்கப்படும் என்றும் கொரோனாக்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம், என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியற்றினார்.