டெல்லி: டெல்லியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டுள்ளது. பலதுறை சாதனை வாகன அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளின்றி சுதந்திர தினவிழா நடைபெற்றது. அமைச்சர்கள், விஐபிக்கள் என 4 ஆயிரம் பேர் சமூக இடைவெளியுடன் அமர்ந்து விழாவை கண்டுகளித்தனர்.