நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கணேச புரத்தை சேர்ந்த 45 வயது கணேசன் என்பவர் நில அபகரிப்பு பிரச்சினை தொடர்பாக சட்ட போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டு பின்பு உண்ணாவிரதம் இருந்த பின்பு கடைசியாக தற்கொலை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்துள்ளார். பாளையங்கோட்டை மாநகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி எண் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது இன்று காலை ஆகஸ்ட் 15 தற்கொலை செய்ய முயன்ற போது பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் அவர்கள் வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு அவரை முதலில் மடக்கி பிடித்தபோது பின் அவருடன் வந்த பணியாளர்களும் உடனடியாக அவரை மடக்கிப்பிடித்து அவரது தற்கொலை முயற்சியை மிகுந்த துணிவோடு எதிர்கொண்டு தடுத்தனர்.