பியோங்யாங்: கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வடகொரியா நீக்கியுள்ளது. சீனாவில் தோன்றி உலகில் 215 நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், வடகொரியாவில் மட்டும் நுழைய முடியவில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தென்கொரயாவில் இருந்து வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கிற்கு சட்டவிரோதமாக வந்த ஒருவரால் வடகொரியாவிலும் கொரோனா தடம் பதித்தது தெரியவந்தது. இதையடுத்து அதிபர் கிம் உடனடியாக அவசர நிலையை அறிவித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதாவது, அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.