சென்னை: ஆர்.ஏ.புரம் பகுதியில் முன்னாள் கவர்னரின் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் 29 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதன்பேரில், பட்டினப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், பட்டினம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆர்.ஏ.புரம், கற்பகம் அவென்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சோதனை செய்தபோது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.