சென்னை: கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவின் சிகாகோ நகரில் தவித்த 60 பேர், சிறப்பு மீட்பு விமானத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். அவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்க சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 5 பேர் அரசின் இலவச தங்குமிடத்திற்கும், 55 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கும் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர். அபுதாபியில் இருந்து 131 பேருடனும், சார்ஜாவில் இருந்து 173 பேருடனும் சிறப்பு மீட்பு விமானங்கள் சென்னை வந்தன. அவர்களில் 170 பேர், அரசின் இலவச தங்குமிடங்களுக்கும், 128 பேர், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கும், 6 பேர் அரசின் சிறப்பு அனுமதியுடன் வீட்டு தனிமைக்கும் அனுப்பப்பட்டனர்.