×

செல்போனில் ஆபாச படம் அனுப்பி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சுற்றிவளைப்பு

அண்ணாநகர்: அண்ணாநகரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணின் செல்போனுக்கு சில நாட்களாக ஒரு புதிய எண்ணில் இருந்து ஆபாச  படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, எதிர் முனையில் பேசிய வாலிபர், ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், இளம் பெண்ணின் தாய் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அறிவுறுத்தியபடி அந்த இளம்பெண் செல்போனில் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அதன்படி, அங்கு வந்த வாலிபரை மாறுவேடத்தில் இருந்த போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.  விசாரணையில், திருத்தணி பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (29), பிரபல ஆன்லைன்  நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வருவது தெரியவந்தது.  இதையடுத்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இவருக்கு பெண்ணின் போன் நம்பரை கொடுத்த நண்பரை தேடி வருகின்றனர்.

Tags : Sexual harassment ,teenager ,siege , Cellphone, pornography, teen, sexual harassment, teenager
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்