பெரம்பூர் : சென்னை திருவிக நகர் 6வது மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு களப்பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர், நிருபர்களை சந்தித்து அமைச்சர் கூறியதாவது:சென்னையில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியில் அமர்த்தி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸால் தமிழர்களுக்கு பெருமை கிடைத்துள்ளது.