புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசை குறைசொல்லாமல் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிழமைகளில் ஊரடங்கு குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.