சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,13,058 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 99,806 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,384 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,868 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் 59.30% ஆண்களும் 40.70% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(13.08.2020) மட்டும், 11,025 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (ஆகஸ்ட்14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்
1 திருவொற்றியூர் 3,614
2 மணலி 1,738
3 மாதவரம் 3,369
4 தண்டையார்பேட்டை 9,433
5 ராயபுரம் 11,072
6 திருவிக நகர் 7,984
7 அம்பத்தூர் 5,863
8 அண்ணா நகர் 11,445
9 தேனாம்பேட்டை 10,728
10 கோடம்பாக்கம் 11,569
11 வளசரவாக்கம் 5,693
12 ஆலந்தூர் 3,237
13 அடையாறு 7,165
14 பெருங்குடி 2,965
15 சோழிங்கநல்லூர் 2,416
16 இதர மாவட்டம் 1,515.
மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 283
2 மணலி 107
3 மாதவரம் 479
4 தண்டையார்பேட்டை 543
5 ராயபுரம் 787
6 திருவிக நகர் 638
7 அம்பத்தூர் 1.563
8 அண்ணா நகர் 1,151
9 தேனாம்பேட்டை 593
10 கோடம்பாக்கம் 1,243
11 வளசரவாக்கம் 867
12 ஆலந்தூர் 568
13 அடையாறு 1,077
14 பெருங்குடி 440
15 சோழிங்கநல்லூர் 435
16 இதர மாவட்டம் 94 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.