இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் இடையே மோதல் வெடித்துள்ளது. இது குறித்து யூடியூபில் ஜாவித் மியான்தத் வெளியிட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் இந்த விளையாட்டை பற்றிய எந்த அடிப்படை விஷயங்களும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் பிரதமர் இம்ரான் கான் தான் என்றும் கடவுள் போல் அதில் செயல்படுவதாகவும் ஜாவித் மியான்தத் கொதித்தெழுந்துள்ளார்.