ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஈரோடு, கரூர் பகுதியிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலம் பயன்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.