கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இ பாஸ் இல்லாமல் செல்லும் வாகனங்களை, வண்டலூர் சோதனை சாவடியில் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்கின்றனர். சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையில் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ஜிஎஸ்டி சாலையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.