அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்பி மரணம்

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்பி ஏ.எம்.வேலு (73). சோளிங்கரில் வசித்து வந்த இவர், கடந்த சில வாரங்களாக கடும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று மரணமடைந்தார். இவர் 1980, 1996ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 முறை எம்பியாக இருந்தார். தற்போது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழு துணைத்தலைவராக இருந்தார். இவருக்கு 2மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பஸ் நிறுவனம், கல்லூரி நடத்தி வந்தார். இவரது உடல் சோளிங்கரில் அடக்கம் செய்யப்பட்டது. ஏ.எம்.வேலு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: