சென்னை: பாஜக நிர்வாகியான, நடிகர் எஸ்.வி சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக அரசையும், அதிமுக கொடியை அவமதித்தும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர். மேலும் வழக்கு போட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் என்று முதல்வர் விமர்சித்திருந்தார். மேலும் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்த நிலையில், மீண்டும் அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.