மாஸ்கோ: ரஷ்யாவின் மிகப்பெரிய அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சைபீரியாவில் இயங்கி வரும் ஆலையின் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ பல அடி உயரத்துக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 19 வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.