திருமங்கலம்: திருமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் கண்ணாடி கதவு உடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக இயங்கி வருவது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் கற்பகம் நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் இயங்கி வருகிறது. நகரில் வளர்ந்து வரும் பகுதியான கற்பகம்நகர், காமராஜபுரம், ஆறுமுகம்ரோடு, சோணைமீனா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் நலனுக்காக இந்த பகுதியில் ஏடிஎம் மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவின் ஒருபக்கம் கண்ணாடி உடைந்த நிலையில் இந்த மையம் இயங்கி வருகிறது.