டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் 74வது சுதந்திர தின ஒத்திகை: நாளை மறுநாள் விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள 74வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒத்திகைகள் நடைபெற்றன. டெல்லியை சுற்றிலும் விழாவை முன்னிட்டு கூடுதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஆக. 15) நாடு முழுவதும் 74வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றுகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு உள்ளது. மேலும், சுதந்திர தின விழாவை யொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்லியில் சட்டம் ஒழுங்கு பணியை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளிலும் உள்ளூர் போலீசாருடன், மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதோடு,

அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று விழா நடைபெறும் செங்கோட்டை வளாகத்தில் பிரதமர், முக்கிய பிரமுகர்கள், பார்வையாளர்கள் செல்லும் பாதை, மாணவ, மாணவியர் அமரும் இடங்களில் சமூக இடைவெளியுடன் ஒத்திகை பார்க்கப்பட்டன. ெடல்லியில் இன்று காலை பலத்த மழைக்கு மத்தியில், பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தின ஒத்திகையும் நடந்தது.

Related Stories: