சென்னையில் இருந்து 3-ம் கட்டமாக புறப்பட்ட அமோனியம் நைட்ரேட் ஐதராபாத் சென்றடைந்தது

ஐதராபாத்: சென்னையில் இருந்து 3-ம் கட்டமாக புறப்பட்ட அமோனியம் நைட்ரேட் ஐதராபாத் சென்றடைந்தது. இரு தினங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 181 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அடைக்கப்பட்ட 10 கன்டெய்னர் பெட்டிகள் ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் 229 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அடைக்கப்பட்ட 12 பெட்டிகள் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில், இறுதியாக 287 டன் எடைகொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனம் அடைக்கப்பட்ட 15 கன்டெய்னர் பெட்டிகள் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: