காவியை களங்கம் என்றால் தேசியக் கொடியில் இருந்து நீக்கிவிடுவீர்களா என கேட்ட விவகாரம!: பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி.சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!

சென்னை: தேசியக்கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி. சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க - வை சேர்ந்த எஸ்.வி. சேகர் அவருக்கு சொந்தமான யூ - டியூப் சேனலில் சமீபத்தில் அதிமுக அரசை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர். வழக்கு போட்டால் ஓடி ஒளிந்துகொள்வார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார். மேலும், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியை தான் ஆகஸ்டு 15ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக்கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றுகிறாரா ? தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும். என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றினை அளித்திருந்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் மற்றும் தேசிய சின்னங்கள் அவமதிப்பை தடுக்கும் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் தண்டனை உறுதியானால் 3 வருடம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories: