சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்திய போலீசார்

ராமேஸ்வரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 74 வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலும் விழாவை சீர்குலைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை களும் செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories: