திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பராமரிப்பின்றி பாழான மரச்சிற்பங்கள் மீண்டும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன 62 மரங்களை அகற்றாமல், அதில் கலை நுட்பத்துடன் கூடிய அழகிய மரச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மயில், முதலை, குதிரை, பட்டாம்பூச்சி, பறவை போன்ற பல்வேறு விதமான சிற்பங்கள் மரத்தில் செதுக்கியதால், கிரிவலப்பாதையில் செல்வோர் வியப்புடன் அதனை கண்டு ரசித்தனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு கிரிவலப்பாதையில் மக்கள் நடமாட்டம் முடங்கியது. மேலும், கிரிவல பாதையில் மரங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் பராமரிப்பின்றி பாழானது.