திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி 88 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வகையில் மத்திய, மாநில அரசுகள் இலவச மளிகை பொருட்கள் ரேஷன் கார்டுகள் மூலம் அளித்து வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் மிக முக்கியமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.